search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "விருதுநகர் கலெக்டர் அலுவலகம்"

    • தீக்குளிக்கும் முயற்சியில் ஈடுபட்ட பெண்ணை சூலக்கரை போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர்.
    • தீக்குளிக்க முயற்சி செய்த பெண் மதுரை மாவட்டம் கள்ளிக்குடி அருகே உள்ள குராயூரை சேர்ந்த சீதாலட்சுமி என தெரியவந்தது.

    விருதுநகர்:

    விருதுநகர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் இன்று பொதுமக்கள் குறைகள் தொடர்பாக மனு அளிக்க வந்திருந்தனர். அப்போது 2 மகள்களுடன் வந்திருந்த 31 வயது ஒரு பெண் திடீரென தான் மறைத்து வைத்திருந்த மண்எண்ணையை 2 மகளின் மீதும் ஊற்றி பின்னர் தன் உடல் மீதும் ஊற்றி தீ வைத்துக் கொள்ள முயன்றார்.

    இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த பாதுகாப்பு போலீசார் விரைந்து செயல்பட்டு அந்த பெண்ணை தடுத்து நிறுத்தி 3 பேரையும் காப்பாற்றினார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

    இதைத்தொடர்ந்து தீக்குளிக்கும் முயற்சியில் ஈடுபட்ட பெண்ணை சூலக்கரை போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர்.

    அப்போது தீக்குளிக்க முயற்சி செய்த பெண் மதுரை மாவட்டம் கள்ளிக்குடி அருகே உள்ள குராயூரை சேர்ந்த சீதாலட்சுமி என தெரியவந்தது. 2 பேர் அதிகாரியிடம் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:-

    கருத்து வேறுபாடு காரணமாக எனது கணவர் முருகன் 15 வருடங்களுக்கு முன்பு பிரிந்து சென்று விட்டார். இதனால் எனது 2 மகள்களுடன் வாழ்ந்து வந்தேன்.

    அருப்புக்கோட்டையில் ஜவுளி கடை வைத்திருந்த எனக்கும் உறவினரான கூத்திப்பாறையைச் சேர்ந்த பாலாஜிக்கு(21) பழக்கம் ஏற்பட்டது. அப்போது பாலாஜி திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறினார். இருவரும் நெருங்கி பழகினோம். அதனைத் தொடர்ந்து கடந்த ஏப்ரல் மாதம் பாலாஜி என்னை (சீதாலட்சுமி) திருமணம் செய்து கொண்டார்.

    ஆனால் இந்த திருமணத்திற்கு பாலாஜியின் பெற்றோர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். திருமணம் முடிந்த சில நாட்களிலேயே பாலாஜியை வலுக்கட்டாயமாக பெற்றோர் அழைத்துச் சென்றனர். இதனை தட்டிக் கேட்க சென்ற என்னை பாலாஜி குடும்பத்தினர் தாக்கி கொலை மிரட்டல் விடுத்தனர்.

    மேலும் இது தொடர்பாக அருப்புக்கோட்டை தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் பார்த்திபன், அருப்புக்கோட்டை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பேச்சிமுத்து ஆகியோர் தொடர்ந்து பொய் வழக்கு போடுவதாக மிரட்டி வருகின்றனர். மேலும் எனது மகள்களின் பள்ளிக்குச் சென்றும் போலீசார் தொந்தரவு செய்து வருகின்றனர். என் வாழ்க்கையை சீரழித்த பாலாஜியின் பெற்றோர் அவரது உறவினர்கள் மற்றும் போலீஸ் இன்ஸ்பெக்டர், சப் இன்ஸ்பெக்டர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவர் மனுவில் கூறியிருந்தார்.

    கணவர் வேறு பெண்ணுடன் தொடர்பு வைத்துள்ளதால் அவரை மீட்டுதரக்கோரி கலெக்டர் அலுவலகத்தில் இளம்பெண் மகளுடன் தீக்குளிக்க முயற்சி செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    விருதுநகர்:

    விருதுநகர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் வாரந்தோறும் திங்கட்கிழமையன்று மக்கள் குறைதீர்க்கும் முகாம் நடைபெறும். இதில் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள் தங்கள் குறைகளை மனுக்களாக கலெக்டரிடம் அளிப்பார்கள்.

    இன்றும் குறைதீர்க்கும் முகாமிற்கு கலெக்டர் அலுவலக வளாகத்தில் பொதுமக்கள் கூட்டம் அலைமோதியது.

    இன்று காலை 10.30 மணிக்கு 29 வயது மதிக்கத்தக்க இளம்பெண் தனது 9 வயது மகளுடன் கலெக்டர் அலுவலத்திற்கு வந்தார். அவர் மனு கொடுக்க வரிசையில் காத்திருந்தார்.

    அப்போது திடீரென்று தான் மறைத்து வைத்திருந்த மண்எண்ணையை மகள் மற்றும் தனது உடலில் ஊற்றிக் கொண்டு தீக்குளிக்க முயற்சித்தார்.

    இதை பார்த்த அக்கம், பக்கத்தினர் மற்றும் போலீசார் விரைந்து செயல் பட்டு தீக்குளிப்பதை தடுத்து அவர்கள் மீது தண்ணீர் ஊற்றினர். இதனால் கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

    தாய், மகள் எதற்காக தற்கொலைக்கு முயன்றனர்? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். விசாரணையில் எம்.புதுப்பட்டி இந்திரா காலனியைச் சேர்ந்த மகேஸ்வரி, அவரது மகள் காவியா ஆகியோர் தீக்குளிக்க முயற்சித்தது தெரியவந்தது.

    மகேஸ்வரியின் கணவர் வேறு ஒரு பெண்ணுடன் தொடர்பு வைத்துள்ளதாகவும், அவரை மீட்டுத்தரக்கோரி மகேஸ்வரி, மகளுடன் தீக்குளிக்க முயன்றுள்ளார்.

    ×